top of page
  • hashtagkalakar

பெண்

By R.Subalakshmi


உதிரத்தில் உறைந்தபடி வெளியே வந்தாள்

தன்கண் சிவக்க, தாயை புன்முறுக வைத்தாள்,

தன் தாய்க்கு சேய்யாகி, தன் அழகு செயல்களால்

தாயை தன் சேய் ஆக்கினாள், அழுகைகளுடன்

தன் இருக் கருவிழிகளில் அன்பை புதைத்து வைத்து‌

உலகத்தின் எல்லையைப் பார்த்து வியக்க வந்தாள்,

தன் அறிவுத்திறனால் இலட்சியத்தின் உயரத்தை எட்ட

முயற்சி செய்தாள் ஆவலுடன், அவ்வப்போது

மாதவம் அடைந்து, அதே உதிரம் அவளின் மனதை

உருக்குலைத்தது , மற்றவர்களின் பேச்சால்




இருப்பினும், அவள் உதிரத்தில் உறையாமல் தன் கனவுச்

சிறகை விரித்து ‌உச்சத்தை அடைய முயற்சித்தாள்,

பல கஷ்டங்களை, இஷ்டங்களாய் மாற்றி உழைப்பினால்

தன் கனவுகளின், நினைவுகளை நிஜமாக்கினாள்.

தன் அன்பினால் கைக்கோர்த்து துணைக்கு துணையாகி

தன் தாய்மையை அடைந்தாள்‌ புன்னகையுடன், பின்

பாசப்போராட்டத்தோடு,கனவுப்போராட்டத்தையும்

எதிர்கொண்டு ஓடினால் நம்பிக்கையுடன்,

பல முற்றுப்புள்ளிகளை,தொடர்புள்ளிகளாய் மாற்றி

தன் வாழ்க்கையின் வெற்றி மகுடத்தை சூடினாள்.....



By R.Subalakshmi





1 view0 comments

Recent Posts

See All

By Vidhi Krupal Shah ना जाने वो दिन कहा चले गए हैं ना जाने वो दिन कहा चले गए हैं जहा हर छोटी खुशी भी बड़ी लगती थी । ना जाने वो दिन कहा चले गए हैं जहा प्यार का दिखावा ना होके सच्चा प्यार था । ना जाने व

By Snigdha Bhardwaj सुनो आज चाँद देखा क्या? क्या देखी तुम्हें लुभाने को, उसकी बादलों संग लुका छुप्पी की अठखेलियाँ? या देखे उसके अक्स में एक दूजे को तलाशते दीवाने? या फिर उसकी आभा पर कविता लिखते कवि दे

By Snigdha Bhardwaj चलो ना कहीं और चलते हैं, अहम और अपेक्षाओं से परे, चलो एक नया जहान गढ़ते हैं, चलो ना कहीं और चलते हैं। वो जहान जहाँ कोई जानता ना हो, हमारी खामियों को पहचानता ना हो। वो जहान जहाँ कोई

bottom of page